×

திண்டுக்கல் நாகல் நகரில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

திண்டுக்கல், ஜூலை 15: திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் சாலை குறுகி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நேற்று நகரமைப்பு அதிகாரிகள் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனங்கள், வீடுகள், கடைகள் கட்டியுள்ள படிக்கட்டுகள், ஷட்டர்களை பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

அப்போது அங்கு தரைக்கடை நடத்தி வந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் அகற்ற கூடாது எனக்கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்தனர். தொடர்ந்து இதுபோன்ற பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post திண்டுக்கல் நாகல் நகரில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Dindigul Nagal ,Dindigul ,Dindigul Nagalnagar ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...